செய்திகள்

ஆசிய கலப்பு அணிகள் பாட்மிண்டன் போட்டி: இந்தியா தோல்வி

DIN


ஆசிய கலப்பு அணிகள் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூரிடம் 2-3 என்ற கேம் கணக்கில் இந்திய தோல்வியடைந்தது.
கலப்பு இரட்டைர்கள் எம்.ஆர்.அர்ஜுன்-ருதபர்ணா பாண்டா, 16-21, 13-21 என சிங்கப்பூரின் டேனி பவா, டேன்வெய் ஹேனிடம் தோற்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் 21-8, 12-21. 21-17 என கீயன் லோவை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் அர்ஜுன்-ஷிலோக் இணை 21-16, 21-18 என்ற கேம் கணக்கில் லோ கீயன்-கிறிஸ்டனாவை வீழ்த்தனர். எனினும் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆரத்தா சாரா-பாண்டா இணை 22-24, 21-15, 21-16 என்ற கேம் கணக்கில் புத்ரி சரி-லிம் மிங் இணையிடம் தோல்வியுற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அஸ்மிதா சாஹிலியா 21-17, 12-21, 16-21 என ஜியா மின்னிடம் போராடி தோல்வியுற்றார்.
முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காத நிலையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்து கட்டாயம் வெல்லவேண்டிய  ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொள்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT