செய்திகள்

காலவரையற்ற விடுமுறையில் செல்ல விரும்புகிறேன்

DIN

காலவரையற்ற விடுமுறையில் செல்ல விரும்புவதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்கௌர் தெரிவித்தார்.
மே.இ.தீவுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், ஹர்மன்ப்ரீத் கௌரும், அணி நிர்வாகமும் இணைந்து மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பங்கு இருப்பதாக புகார் எழுந்தது. 
மிதாலி ராஜ் அவருக்கு எதிராக சரமாரியாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிதாலி ராஜ் கேப்டனாகவும், டி20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். 
அதன்பிறகு, மிதாலி ராஜுக்கும், தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கௌர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அவர் காலவரையற்ற விடுமுறையில் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் விளையாட்டு செய்தி இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன். 
இதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சகாலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT