தனது 31-வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடானில் கொண்டாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.
தங்களுடைய பூடான் சுற்றுப்பயணத்தில் 8.5 கி.மீ மலையேற்றம் சென்றது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அனுஷ்கா சர்மா. அப்போது மலை கிராமம் வழியே சென்றபோது குடும்பம் ஒன்று தங்களுக்கு அளித்த வரவேற்பு குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தக் குடும்பத்தினருக்கு நாங்கள் யார் என்றே தெரியாது, இருந்தும் எங்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொண்டார்கள். அவர்களுடன் அமர்ந்து உரையாடி, தேநீர் அருந்தினோம். இதுதான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். அற்புதமான அனுபவங்கள் என்று அனுஷ்கா சர்மா நெகிழ்ந்துள்ளார்.