தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முரளி விஜய் ரன் எடுக்காமலும் அஸ்வின் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆனால் அபினவ் முகுந்தின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது தமிழக அணி. 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்தப் பாதி தமிழக அணிக்குச் சாதகமாக அமையவில்லை. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் பாபா அபரஜித் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு தமிழக அணியால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. பதிலாக, தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் பின்னடைவு ஏற்பட்டது.
விஜய் சங்கர் 38, ஷாருக் கான் 27 ரன்களும் எடுத்து ஓரளவு உதவினாலும் தமிழக அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. ஒரு கட்டத்தில் தமிழக அணி, 38-வது ஓவரின்போது 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் தமிழக அணி 300 ரன்களைத் தொட முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 ரன்களில் பாபா அபரஜித் ரன் அவுட் ஆனதால் அது பெரிய சிக்கலாக அமைந்தது. கடைசியில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் மிதுன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடக அணித் தரப்பில் மிதுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.