முகப்பு
செய்திகள்

டெஸ்ட் அணிக்கு மட்டும் ஷுப்மன் கில் தேர்வானது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்

ஷுப்மன் கில், மிகத் திறமையான வீரர். ஆனால் டி20 அணியில் 15 பேரை மட்டும் தானே தேர்வு செய்யமுடியும்?

Updated On : 25 அக்டோபர், 2019 at 12:49 PM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் இளம் வீரர் ஷுப்மன் கில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு டி20 அணியில் இடம் இல்லை. இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

ஷுப்மன் கில், மிகத் திறமையான வீரர். ஆனால் டி20 அணியில் 15 பேரை மட்டும் தானே தேர்வு செய்யமுடியும்? மேலும் இது 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் மட்டுமே. வருங்காலங்களில் அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் நம் அணியின் முக்கிய வீரராகத் திகழ்வார் என்று கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.