ஓய்வு நேரங்களில் மனைவியுடன் காரில் நீண்டத் தூரம் செல்வது பிடிக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆடி ஏ 6 கார் அறிமுக விழாவில் கோலி பேசியதாவது:
நேரம் சரியாக இருப்பதால் நானும் மனைவியும் காரில் நீண்டத் தூரம் செல்ல முடிவதில்லை. எப்போது நேரம் கிடைத்தாலும் இன்பச் சுற்றுலாவுக்குத் திட்டமிடுகிறோம். உள்ளூரில் நீண்ட நாள் இருக்கும்போது நீண்டத் தூரப் பயணம் எங்கெங்கு செல்வது என முடிவெடுக்கவேண்டும். நெடுஞ்சாலைகளில், இரவு நேரங்களில் நீண்டத் தூரப் பயணம் செல்வது நல்லது. மனைவியுடன் நெடுந்தூரப் பயணங்களில் ஈடுபடுவதே என் விருப்பம்.
நீண்டத் தூரப் பயணங்களில் எங்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. காரில் ஏறி உட்கார்ந்து அப்படியே செல்லவேண்டியதுதான். போதும் என எண்ணுகிறபோது திரும்பி வீட்டுக்கு வந்துவிடவேண்டும். நல்ல வானிலையில், நல்ல இசையைக் கேட்டுக்கொண்டே பயணம் மேற்கொள்ளவேண்டும். இனிமேல் நான் உள்ளூரில் இருக்கும்போது அதிக நீண்டத் தூரப் பயணங்களில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.