செய்திகள்

இரு வெற்றிகளில் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நெருங்கவுள்ள நடால்!

எழில்

மூன்று நாள்களில் இரு மிகச்சிறந்த வீரர்கள் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள ஒரு சாம்பியனாவது ரசிகர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் அல்லவா!

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால். 

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 6-4, 7-5, 6-2 என்கிற நேர் செட்களில் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனைத் தோற்கடித்துள்ளார் நடால். அரையிறுதியில் இத்தாலியின் 23 வயது மாட்டோ பெர்ரெட்டினியைச் சந்திக்கவுள்ளார். இன்னும் இரு வெற்றிகள் பெற்றால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுவிடுவார் நடால். இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உள்ள ஃபெடரரின் சாதனைக்கு அருகில் நெருங்குவார். 

ஞாயிறன்று நடைபெறவுள்ள யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றை வெல்லும் வீரருக்கு ரூ. 27.66 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT