செய்திகள்

இந்திய ஏ அணி வெற்றி: ஆட்ட நாயகனான ஆல்ரவுண்டர்!

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

எழில்

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 164 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்குரும் கே. கெளதமும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 90 ரன்களும் ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்‌ஷேனா 61 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் என்ஜிடி, டேன் பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தென் ஆப்பிரிக்க  ஏ அணி, 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி, 58.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ தரப்பில் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு இந்திய ஏ அணி வெற்றி பெற 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய ஏ அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக ஜலஜ் சக்‌ஷேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT