பாட்னா வீரரை மடக்க முயலும் ஜெய்ப்பூர் வீரர்கள். 
செய்திகள்

புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை 36-33 என்ற

DIN


புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை 36-33 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது பாட்னா பைரேட்ஸ்.
கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாட்னாவின் அபார ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியும் ஈடுகொடுத்து ஆடியது. ஆனால் பாட்னா தரப்பில் நட்சத்திர வீரர்கள் பார்திப் நர்வால், நீரஜ் குமார், ஜங் குன் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
முதல் பாதி ஆட்ட முடிவில் ஜெய்ப்பூர் 15-14 என முன்னிலை பெற்றிருந்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்த நிலையில், இறுதிக் கட்டத்தில் நீரஜ்குமார், ஜங்குன் ஆகியோர் அபாரமாக ஆடி பாட்னாவை வெற்றி பெற வைத்தனர். சிறந்த ரைடராக சுஷில் குலியாவும், டிபன்டராக சந்தீப் துலும் தேர்வு பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT