செய்திகள்

விஜய் ஹசாரே போட்டியில் விளையாடவுள்ள ரிஷப் பந்த், ஷிகர் தவன்!

எழில்

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 25 வரை பெங்களூரு, ஜெய்ப்பூர், வதோதரா, டெஹ்ராடுன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.

அக்டோபர் 2 அன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனால், இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், இப்போட்டியில் எவ்வளவு ஆட்டங்களில் விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவனும் சைனியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததால் அவர்கள் முழுப்போட்டியிலும் பங்கேற்பார்கள்.

தவன், ரிஷப், சைனி ஆகியோர் தில்லி அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நேரம் கிடைக்கும்போது விராட் கோலியும் இஷாந்த் சர்மாவும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார் தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT