செய்திகள்

உலக மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் ராகுல் அவாரே

DIN

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ராகுல் அவாரே.
ஆடவர் 61 கிலோ இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகுல் அவாரே 11-4 என்ற புள்ளிக் கணக்கில் பான் அமெரிக்கன் சாம்பியன் டைலர் லீயை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெளியேறினார் தீபக் புனியா
இறுதிச் சுற்றில் காயமடைந்த நிலையில் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினார் இந்திய நட்சத்திர வீரர் தீபக் புனியா.
ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஈரான் வீரர் ஹசன் யஸ்தானியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுவதாக இருந்தது.
முதன்முறையாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இறுதிச் சுற்றில் நுழைந்தார் தீபக் புனியா.
இதற்கிடையே காலில் ஏற்பட்ட காயத்தால் தான் இறுதிச் சுற்றில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தீபக் புனியா. இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா ஆகியோர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.
அரையிறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீஃபன் ரெய்ச்முத்துடன் மோதிய போது, காலில் காயமடைந்து, கண்ணிலும் வீக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 
இது இந்தியா வெல்லும் 5 ஆவது பதக்கம் ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT