செய்திகள்

தெ.ஆ. டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக பும்ரா விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் நடைபெறும் இப்போட்டியில் 9 நாடுகள் பங்கேற்று 72 ஆட்டங்களில் மோதுகின்றன. இந்தியா ஏற்கெனவே 2-0 என மே.இ.தீவுகளை வென்று 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018 முதல் உமேஷ் யாதவ் 5 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைக்க இது நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.  

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், உமேஷ் யாதவ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT