செய்திகள்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-வது டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

DIN


இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 

இதில், முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், 3-வது டி20 இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. ஆனால், காலை பெய்த மழையால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதனால், இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசாத நிலையில் கைவிடப்பட்டது. 

இதன்மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி 2 டி20 ஆட்டங்கள் முறையே அக்டோபர் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT