கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆர்ஜெண்டினா கால்பந்து வீரர்
ஆர்ஜெண்டினா கால்பந்து வீரர் பாலோ டைபலா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜெண்டினா கால்பந்து வீரர் பாலோ டைபலா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 31,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ஜெண்டினா கால்பந்து வீரர் பாலோ டைபலா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு வாரங்களில் கரோனா வைரஸுக்காக நடத்திய பரிசோதனைகளில் நான்கு முறை பாஸிடிவ் முடிவு கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தனக்கும் காதலிக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக டைபலா அறிவித்தார்.