செய்திகள்

ஐபிஎல் 2020: பிசிசிஐ எடுத்துள்ள முக்கிய முடிவுகள்

இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று ஐபிஎல் தொடங்குகிறது.
* இறுதிச்சுற்று நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நடைபெறுகிறது. முதல்முறையாக ஐபிஎல் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமைக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
* 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்துகொள்ளும் ஐபிஎல் போட்டி நீண்ட நாள் நடைபெறுவது இதுவே முதல்முறை.
* 10 நாள்களுக்கு ஒரே நாளில் இரு ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 
* துபை, அபு தாபி, ஷார்ஜா ஆகிய மையங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
* ஓர் அணியில் 24 வீரர்களுக்கு அனுமதி
* கரோனா மாற்று வீரர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT