செய்திகள்

169 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்: முதல் டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு!

DIN

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தானுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளைகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தது. இரு சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸ் 100% உடற்தகுதியில் இல்லாமல் போனாலும் இந்த டெஸ்டில் விளையாடுவதாக ஜோ ரூட் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் மசூத் 156 ரன்கள் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 24 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்து அணித் தரப்பில் பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி முதல் டெஸ்டை வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT