செய்திகள்

2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அறிவிப்பு

DIN

2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும். 2022-ல் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13 அன்று நடைபெறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT