செய்திகள்

ரஞ்சி: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழக அணி!

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

எழில்

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த தமிழக அணி, ரயில்வே அணியை இன்னிங்ஸ் வெற்றியுடன் வீழ்த்தி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் எடுத்து அசத்தியது. முகுந்த் 100 ரன்களும் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தார்கள். ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடிய ரயில்வே அணி, மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

இதனால் இந்த ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளைப் பெற்றது தமிழக அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT