செய்திகள்

ரஞ்சி: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தமிழக அணி!

எழில்

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

5 ஆட்டங்களில் 5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த தமிழக அணி, ரயில்வே அணியை இன்னிங்ஸ் வெற்றியுடன் வீழ்த்தி 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரயில்வே அணி, முதல் இன்னிங்ஸில் 76 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின், சித்தார்த் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் எடுத்து அசத்தியது. முகுந்த் 100 ரன்களும் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தார்கள். ஹர்ஷ் தியாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் விளையாடிய ரயில்வே அணி, மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

இதனால் இந்த ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளைப் பெற்றது தமிழக அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT