செய்திகள்

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார் சானியா மிர்சா!

எழில்

கடந்த வாரம் ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா, காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சானியா மிர்சா - நாடியா இணை, சீனாவின் ஸின்யுன் ஹான் - லின் ஷு இணையை எதிர்கொண்டது. முதல் செட்டில் இந்திய இணை 2-6 எனத் தோற்று 2-வது செட்டில் 0-1 எனப் பின்தங்கியிருந்தபோது சானியா மிர்சாவுக்குக் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆட்டத்திலிருந்து விலகுவதாக சானியா அறிவித்தார். இதையடுத்து முதல் சுற்று ஆட்டத்தில் சானியா - நாடியா இணை தோல்வியடைந்தது.

இதுமட்டுமல்லாமல் சானியாவின் காயம் காரணமாக கலப்பு இரட்டையர் போட்டியிலிருந்தும் சானியா மிர்சா - ரோஹன் போபன்னா இணை வெளியேறியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT