செய்திகள்

எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய இலங்கை வீராங்கனை ஓய்வு

DIN

எட்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2006 முதல் இலங்கை அணிக்காக விளையாடி வந்த 34 வயது வீரக்கொடி, கடைசியாக 2018-ல் விளையாடினார்.

2009, 2013, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் 2009, 2010, 2012, 2014, 2018 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் வீரக்கொடி. 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி வெண்கலம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

இலங்கை அணிக்காக 89 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, ஃபிட்னஸ் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT