செய்திகள்

இலங்கை டி20 லீக் போட்டி ஆகஸ்ட் 28-ல் தொடக்கம்

DIN


இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி ஆகஸ்ட் 28 முதல் தொடங்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியை நடத்துவதற்குச் சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை இப்போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நான்கு மைதானங்களில் 23 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்குபெறவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்க 70 சர்வதேச வீரர்களும் 10 பிரபல பயிற்சியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டத்தின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT