செய்திகள்

நாளை விளையாடுவாய், 5 விக்கெட்டுகளை எடுத்துத் தா: குல்தீப் யாதவிடம் கும்ப்ளே

DIN

சில வருடங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் குல்தீப் யாதவ் அறிமுகமாகி 5 விக்கெட்டுகளை எடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் குல்தீப் யாதவ் கூறியதாவது:

டெஸ்ட்டுக்கு முந்தைய நாள் மதியம், நான் விளையாடுவது குறித்து சொன்னார் கும்ப்ளே சார். அந்த டெஸ்ட் பற்றி எண்ணும்போது நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். எப்படி விளையாடப் போகிறேன் என எண்ணியிருந்தேன். நாளை விளையாடுவாய், 5 விக்கெட்டுகளை எடுத்துத் தா என்றார் கும்ப்ளே. நான் ஒரு நொடி அமைதி காத்தேன். நிச்சயமாக சார் எனப் பதில் அளித்தேன்.

டெஸ்ட்டில் அறிமுக நாளன்று பதற்றத்தில் இருந்தேன். உணவு இடைவேளைக்கு முன்பு சில ஓவர்கள் வீசி இயல்பாகி விட்டேன். ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் எப்படி ஆடுவேனோ அதேபோல விளையாட எண்ணினேன்.

ஸ்டம்புகளின் பின்னால் இருந்து தோனி ஏராளமான அறிவுரைகளைக் கூறுவார். இதனால் என்னுடன் பயிற்சியாளர் இல்லை என்கிற குறையே ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT