செய்திகள்

இந்திய மகளிர் அணியை யாரும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை: மிதாலி ராஜ்

இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்

DIN

இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இப்போதெல்லாம் இந்திய மகளிர் அணியை எந்த எதிரணியும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களை நன்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும் டி20யில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இதர அணிகளுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஊரடங்குச் சமயத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது பற்றி அவர் கூறியதாவது:

எல்லோராலும் சுலபமாகப் பயிற்சிகள் எடுக்க முடிவதில்லை. அவரவருக்கு உள்ள இடத்துக்கு ஏற்றவாறு பயிற்சிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். பயிற்சியாளர் ராமன் சார் அதற்குரிய வித்தியாசமான யோசனைகளைக் கூறி வருகிறார்.

என்னதான் உள் அரங்கில் பயிற்சி எடுத்தாலும் மைதானத்தில் பயிற்சி எடுப்பது போல வராது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT