முகப்பு
செய்திகள்

ஐபிஎல் போட்டியில் சாதித்ததை வைத்து இந்திய அணி கேப்டனை ஏன் தேர்வு செய்யக் கூடாது?: கெளதம் கம்பீர் கேள்வி

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறோம்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறபோது அதேபோல கேப்டனையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.

இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

விராட் கோலி மோசமான கேப்டன் இல்லை. ஆனால் ரோஹித் சர்மா நல்ல கேப்டன். இருவருடைய தலைமைப்பண்பிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறோம். அதேபோல ஐபிஎல்-லில் சாதித்ததை வைத்து இந்திய அணி கேப்டனையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது? அப்படி இல்லாவிட்டால் ஐபிஎல் போட்டியை அளவுகோலாக வைத்து பேட்டிங், பந்துவீச்சுத் திறமைகளையும் மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →