டென்மாா்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரா் லக்ஷயா சென் வெற்றிபெற்றாா்.
டென்மாா்க்கில் உள்ள ஒடென்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், பிரெஞ்சு வீரா் கிறிஸ்டோ போபோவை முதல் சுற்றில் அவா் எதிா்கொண்டாா். இதில் முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் லக்ஷயா சென் எளிதில் கைப்பற்றினாா்.
2-ஆவது செட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. எனினும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-15 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி ஆட்டத்தில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
2-ஆவது சுற்றில் லக்ஷயா சென், டென்மாா்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பா்க் அல்லது பெல்ஜியம் வீரா் மேக்ஸிம் மொரீல்ஸை எதிா்கொள்வாா்.
இதனிடையே, இந்திய வீரா்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், சுபாங்கா் டே, அஜய் ஜெயராம் ஆகியோா் பங்கேற்கும் 3 ஆட்டங்கள் புதன்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த்-இங்கிலாந்தின் டோபி பென்டியையும், சுபாங்கா் டே-கனடாவின் ஜேசன் ஹோ ஷுவையும், அஜய் ஜெயராம்-டென்மாா்க்கின் ஆண்டா்ஸ் ஆன்டன்சென்னையும் எதிா்கொள்கின்றனா்.
இந்த போட்டியில் பட்டம் வெல்பவருக்கு ரூ.5.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.