செய்திகள்

2 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்: சூப்பர் ஓவரில் தில்லி வெற்றி

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 

தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தின்போது பஞ்சாப் அணி 2-வது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் அந்த அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், பூரனும் களமிறங்கினர். தில்லி அணிக்கு ரபாடா பந்துவீசினார்.

முதல் பந்தில் 2 ரன்கள் கிடைக்க, 2-வது பந்தை பவுன்சராக வீசினார். அதை தூக்கி அடிக்க முயன்ற ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது பேட்ஸ்மேனாக மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், ஸ்டிரைக்கில் இருந்த பூரன் 3-வது பந்தில் போல்டானார். இதனால், பஞ்சாப் அணி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தில்லியின் வெற்றிக்கு 3 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தில்லி அணிக்கு ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்தில் பந்த் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை ஷமி வைடாக வீச வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த பந்தில் பந்த் 2 ரன்கள் எடுக்க தில்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT