கோப்புப்படம் 
செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸில் பட்லரும் இல்லை: இன்னும் எத்தனை வீரர்களை இழக்கப் போகிறது?

​ஐபிஎல் 14-ம் சீசனின் இரண்டாம் பகுதியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

DIN


ஐபிஎல் 14-ம் சீசனின் இரண்டாம் பகுதியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

ஐபிஎல் 14-ம் சீசனின் முதல் பாதி இந்தியாவில் நடைபெற்றது. கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தடைபட்டது. இதன் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், ஜாஸ் பட்லர் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதால் இரண்டாம் பகுதி ஐபிஎல் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரராக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. முக்கிய ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். இந்த வரிசையில் தற்போது அணியின் மற்றுமொரு முக்கிய வீரர் பட்லரும் விலகியிருப்பது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT