செய்திகள்

தோனியை விட ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் ஏன்?: சிஎஸ்கே வீரர் பதில்

DIN

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே அணியில் விளையாடிய உத்தப்பா பதில் அளித்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். 

சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) எனச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி கூறியதாவது:

சிஎஸ்கே வீரராகத் தன்னை நிரூபித்தவர் ஜடேஜா. பேட்டிங், பந்துவீச்சிலும் அற்புதமாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தோனியை யாரும் மாற்ற முடியாது. எப்போதும் என்னுடைய கேப்டன் தோனி தான். சிஎஸ்கே அணியின் இதயமும் ஆன்மாவும் தோனி தான் என்றார்.

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுவது குறித்து சிஎஸ்கே அணியில் சமீபத்தில் விளையாடிய வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது:

ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் என்பதை தோனி தான் முடிவு செய்திருப்பார். அணியில் ஜடேஜாவின் மதிப்பு தோனிக்குத் தெரியும். தோனி ஓய்வு பெற்ற பிறகு சிஎஸ்கே அணியை ஜடேஜா தான் வழிநடத்துவார் என எண்ணுகிறேன். ஜடேஜாவுக்கான மரியாதை, மதிப்பை சிஎஸ்கே அளித்துள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT