முகப்பு
செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

உலக பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரின் லோ கீன் யூவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்டார். முதல் கேமின் தொடக்கத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 9-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், யூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், முதல் கேமை கிடாம்பி ஸ்ரீகாந்த்  வெறும் 16 நிமிடங்களில் 15-21 என்ற கணக்கில் இழந்தார்.

தங்கப் பதக்கம் வெல்லும் கனவோடு கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது கேமை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடுமையானப் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. 20-22 என்ற கணக்கில் இதையும் இழந்தார்.

இதன்மூலம், 15-21, 20-22 என்கிற நேர் கேம் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். எனினும், ஆடவர் ஒற்றையரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.

அதேசமயம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை லோ கீன் யூ பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments