செளரவ் கங்குலி 
செய்திகள்

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவருமான செளரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவருமான செளரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட கங்குலிக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கங்குலிக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

இந்தாண்டு தொடக்கத்தில் நெஞ்சு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், அவர் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தரப்பிலிருந்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT