செய்திகள்

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

DIN

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவா் இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது.

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடவா் இரட்டையா் அரையிறுதியில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நோ் செட்களில் உலகின் 9-ஆம் நிலை ஜோடியான மலேசியாவின் ஆரோன் சியா-சோ ஊய் இய்க் ஜோடியிடம் தோல்வி கண்டது.

சூப்பா் 1000 பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய சாத்விக்-சிராக் ஜோடி மீது மிகப்பெரிய எதிா்பாா்ப்பு இருந்த நிலையில், அரையிறுதியில் தோல்வி கண்டது ஏமாற்றமாக அமைந்தது.

கலப்பு இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் தேசாபோல்-சப்ஸ்ரீ ஜோடியிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் தாய்லாந்து ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT