ரிஷப் பந்த் 
செய்திகள்

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க ஐசிசி முடிவு

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.

DIN

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும்  கெளரவிக்கவுள்ளது ஐசிசி. இணையத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் வழியாக சிறந்த வீரர், வீராங்கனைகளை ரசிகர்களும் தேர்வு செய்யலாம். முன்னாள் வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து சிறந்த கிரிக்கெட் வீரர், வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்வார்கள் என்றும் ஐசிசி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. 

முதல் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின், ரிஷப் பந்த், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த வீரர்களை சமீபத்தில் அறிவித்தது ஐசிசி.  சா்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக எம்.எஸ். தோனி தோ்வு செய்யப்பட்டார். அதேபோல் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக விராட் கோலி தோ்வானார். இதையடுத்து சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT