செய்திகள்

யூரோ கால்பந்து: உக்ரைனைப் பந்தாடிய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

DIN


யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

2020-ம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி ஆட்டம் உக்ரைன், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இத்தாலியில் உள்ளூர் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே ஹாரி கேன் அற்புதமான கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 46-வது நிமிடத்தில் ஹாரி மெகுர்  ஒரு கோல், அடுத்த 4-வது நிமிடத்தில் கேன் மீண்டும் ஒரு கோல் அடிக்க இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

உக்ரனை வீரர்கள் செய்வதறியாது திகைத்துப்போக ஜோர்டன் ஹெண்டர்சன் 63-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு கோலை சேர்க்க உக்ரைன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி வரை உக்ரைன் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.

இதன்மூலம், இறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற டென்மார்க் அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் வரும் 8-ம் தேதி மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT