செய்திகள்

இங்கிலாந்தில் பந்தை சுழற்றத் தொடங்கினார் ஜடேஜா

DIN


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை பயிற்சியைத் தொடங்கினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து சென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது. 

இந்திய வீரர்கள் தற்போது சௌதாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சௌதாம்ப்டன் மைதானத்தில் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ஆடுகளத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை ஜடேஜா சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT