மந்தனா - ஷஃபாலி வர்மா 
செய்திகள்

டெஸ்ட்: ஃபாலோ ஆன் ஆன இந்திய மகளிர் அணி, காப்பாற்றுவாரா ஷஃபாலி வர்மா? (ஹைலைட்ஸ் விடியோ)

இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிரிஸ்டோல் நகரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 2-ம் நாள் முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 81.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. ஷஃபாலி வர்மா 96 ரன்களும் மந்தனா 78 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியில் சோஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. ஷஃபாலி வர்மா 55, தீப்தி சர்மா 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

இந்திய அணிக்கு 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 82 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இந்திய அணி ஷஃபாலி வர்மாவின் ஆட்டத்தையே கடைசி நாளன்று பெரிதும் நம்பியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT