ஐ.பி.எல். போட்டிகள் ஏப். 9-ல் தொடக்கம் 
செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகள் ஏப். 9-ல் தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதனிடையே இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. ஆமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் பிளே ஆஃப் போட்டிகளும், மே 30-ல் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகளும், ஆமதாபாத், தில்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல். தொடரில் எந்த அணிகளுக்கும் தங்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT