முகப்பு
செய்திகள்

5-வது டி20யில் நடராஜன்: இந்தியா முதல் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை.

இந்திய அணியில் கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற நிலையில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →