செய்திகள்

கடுமையான வலியில் ஷ்ரேயஸ்: ஐபிஎல் முழுவதிலும் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்

​இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் 2021 ஐபிஎல் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN


இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் 2021 ஐபிஎல் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தொடர்ந்து பீல்டிங் செய்யவில்லை. காயம் காரணமாக மீதமுள்ள 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தது:

"இடது தோள்பட்டையில் அவருக்கு கடுமையான வலி உள்ளது. அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகள் மட்டுமல்ல, முழுவதுமாக அவர் விளையாட மாட்டார்."

ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் பங்கேற்காத பட்சத்தில் ரிஷப் பந்த், அஜின்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT