செய்திகள்

செப்டம்பர், அக்டோபரில் மீண்டும் ஐபிஎல்?

DIN


தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 14-ஐபிஎல் சீசனை  செப்டம்பர் 15 - அக்டோபர் 15 இடையே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தது:

"கரோனைவைக் கருத்தில் கொண்டே அனைத்துத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு செப்டம்பர் 15 - அக்டோபர் 15 இடையே ஐபிஎல்-ஐ நடத்த திட்டமிட்டு வருகிறோம். 25 நாள்களில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்தி முடிக்கப் பார்க்கிறோம். 

இது தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம். இதுபற்றி சனிக்கிழமை நடைபெறும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி முடிவடைகிறது. தனிமைப்படுத்தும் நாள்களைக் குறைக்கும் வகையில், இந்திய வீரர்களை பிரிட்டன் பாதுகாப்பு வளையத்திலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பாதுகாப்பு வளையத்துக்கு அழைத்து வருவது குறித்து திட்டமிடவுள்ளோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT