செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவின் பூஜா ராணி

DIN

துபையில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்றுள்ளார். 

ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபையில் நடைபெற்று வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் மெளலோனாவை 5-0 என்கிற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதற்கு முன்பு 2019-ல் நடந்த போட்டியிலும் 81 கிலோ பிரிவில் பூஜா ராணி தங்கம் வென்றிருந்தார். 

இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

SCROLL FOR NEXT