சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழகம் தனது 3-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது.
இப்போட்டியில் தமிழகத்துக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புதுச்சேரி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 16.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சிறப்பாக பௌலிங் செய்த ரவிஸ்ரீனிவாசன் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் பேட்டிங்கில் அசத்த்திய ஹரி நிஷாந்த் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இதர ஆட்டங்களில் ஆந்திரம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், பரோடா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரையும், குஜராத் 50 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும், தில்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உத்தர பிரதேசத்தையும் வென்றன.
அதேபோல் எஞ்சிய ஆட்டங்களில் மகாராஷ்டிரம் - ஒடிஸாவையும், மும்பை - பெங்காலையும், சிக்கிம் - அருணாசல பிரதேசத்தையும், அஸ்ஸாம் - பிகாரையும், சௌராஷ்டிரம் - உத்தரகண்டையும், விதா்பா - மேகாலயத்தையும், ராஜஸ்தான் - ஹிமாசல பிரதேசத்தையும் வீழ்த்தின.