செய்திகள்

இந்திய அணி பந்துவீச்சு தேர்வு: வெங்கடேஷ் ஐயர் அறிமுகம்

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் விளையாடவுள்ளது.

இந்த போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். இது அந்த அணிக்கு சிறிது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய லாகி பர்குசன் இந்த போட்டியில் விளையாடுகிறார். 

இந்திய அணியில் ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் முதல் முறையாக டி-20 போட்டியில் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT