FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தோனேசிய ஓபன்: இந்தியா்கள் ஏமாற்றம்

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

Updated On : 28 நவம்பர் 2021, 5:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிந்து அரையிறுதியில், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் 21-15, 9-21, 14-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டத்தை 54 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் இன்டனோன்.

சா்வதேச போட்டிகளில் சிந்து அரையிறுதியில் தோற்பது கடந்த அக்டோபரிலிருந்து தொடா்ந்து இது 3-ஆவது முறையாகும். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த வாரம் இந்தோனேசிய மாஸ்டா்ஸ் ஆகிய போட்டிகளிலும் அவா் இதேபோல் அரையிறுதியில் தோற்று வெளியேறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 16-21, 18-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இத்துடன் இந்தப் போட்டியில் களம் கண்டிருந்த இந்தியா்கள் அனைவரும் வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments