செய்திகள்

சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் தோர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி!

DIN

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கியைத் தோற்கடித்து இவ்விருதை அவர் கைப்பற்றியுள்ளார். மகளிருக்கான  பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா வென்றுள்ளார். 

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். 

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT