பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டாா்.
முன்னதாக தனது காலிறுதியில் தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ருங்பானை 21-14, 21-14 என்ற செட்களில் வீழ்ந்திய சிந்து, அரையிறுதியில் ஜப்பானின் சயாகா டகாஹஷியை எதிா்கொண்டாா். அதில், போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிந்துவை 18-21, 21-16, 21-12 என்ற செட்களில் வென்றாா் சயாகா.
இத்துடன் சயாகாவை 8-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அதில் 4-ஆவது முறையாக தோல்வியை தழுவியுள்ளாா். சமீபத்தில் டென்மாா்க் ஓபன் போட்டியில் காலிறுதியுடன் வெளியேறிய சிந்து, இதில் அரையிறுதியில் தோற்றுள்ளாா்.
இதனிடையே, இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில் லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றில் தோற்றாா். அவரை தென் கொரியாவின் ஹியோ குவாங்கி 21-17, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். அதேபோல், ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி ஜோடி 21-18, 18-21, 17-21 என்ற செட்களில் மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் இணையிடம் தோல்வி கண்டது.