செய்திகள்

4-வது டெஸ்ட்:  இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு

DIN

4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ஒருசில வீரர்களை தவிர அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி 148.2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் குவித்தது. 

இதன்மூலம் இங்கிலாந்துக்கு 368 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் சர்மா 127, புஜாரா 61, ரிஷப் பந்த் 50, ஷர்துல் 60 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 3, ராபின்சன், மொயில் அலி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT