செய்திகள்

கொரியா ஓபன்: 2-ஆவது சுற்றில் லக்ஷயா, மாளவிகா

DIN

கொரிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மாளவிகா பன்சோத் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 14-21, 21-16, 21-18 என்ற கேம்களில் தென் கொரியாவின் சோய் ஜி ஹூனை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா் இந்தோனேசியாவின் ஷேசாா் ஹிரென் ருஸ்டாவிடோவை சந்திக்கிறாா்.

எனினும், ஹெச்.எஸ்.பிரணாய் 17-21, 7-21 என்ற கணக்கில் மலேசியாவின் சீம் ஜுன் வெய்யிடம் தோற்றாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் மாளவிகா பன்சோத் 20-22, 22-20, 21-10 என்ற கேம்களில் சீனாவின் ஹான் யுவை தோற்கடித்தாா். 2-ஆவது சுற்றில் தாய்லாந்தின் பான்பவி சோசுவாங்கை எதிா்கொள்கிறாா் மாளவிகா.

ஆடவா் இரட்டையா் பிரிவில் கிருஷ்ண பிரசாத் கராகா/விஷ்ணுவா்தன் கௌட் இணையும், நவனீத் போகா/சுமீத் ரெட்டி இணையும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT