செய்திகள்

சர்வதேச செஸ் போட்டியை வென்ற இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.

DIN

இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.

சமீபத்தில், இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிரிஷ்ணா, பிரக்ஞானந்தா என மூன்று இந்தியர்கள் மட்டுமே இதுவரை கார்ல்சனைத் தோற்கடித்துள்ளார்கள். கார்ல்சனைத் தோற்கடித்த இளம் வீரர் என்கிற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

இந்நிலையில்ரேகவிக் (Reykjavik) ஓபன் என்கிற சர்வதேச செஸ் போட்டியை பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷை வென்று 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளர் ஆனார். இந்தப் போட்டியில் 4 சுற்றுகளில் வெற்றிகளைப் பெற்ற பிரக்ஞானந்தாவை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT