செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: ஆடவர் ஏ அணி ஹரிகிருஷ்ணா வெற்றி

DIN


நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்றில் இந்திய ஆடவர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார். 

கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய ஹரிகிருஷ்ணா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துசத்தோரோவ் நோடிர்பெக்கை 34 வது நகர்த்தலில் வென்றார். 

இதற்கு முன்பு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், தமிழக வீரர் குகேஷ், ஆர்மேனிய வீரர் கேப்ரியல் சர்கிசியனை 41வது நகர்வில் வீழ்த்தினார். 

சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற்ன. ஆகஸ்ட் 10 வரை செஸ் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். 

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT