இந்தியாவின் பிரபல பாட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
பாட்மின்டனில் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, வெண்கலமே சிந்துவுக்கு கைகூடியது. தற்போது அபார பாா்மில் உள்ள அவா் இந்த முறை தங்கம் வெல்வாா் என எதிர்பார்ந்திருந்தனர்.
அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜின் மின் என்பவரை 21- 19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் பி.வி. சிந்து. இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியா 45 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.